பழங்கால மனிதர், மலம், மலம் கண்டுபிடிப்பு, உணவுப் பழக்கம்| Dinamalar

இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள ஸ்டோன்ஹென்ஜ் அகழ்வாய்வு பகுதியில் பழங்கால மனிதர்களின் பதப்படுத்தப்பட்ட மலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களது உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சுமார் 4,500 அண்டுகளுக்கு முன்னர் நியோலிதிக் காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் மக்கள் விவசாயம், வணிகம் உள்ளிட்ட வேலைகளைச் செய்து வாழ்ந்துவந்தனர். அப்போது இங்கிலாந்தில் வசித்த பழங்குடி மக்கள் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடி வந்தனர். அவர்கள் தங்களது மலத்தையும் அவர்கள் வளர்த்துவந்த காவல் நாய்களின் மலத்தையும் தங்கள் வசிப்பிடங்களில் பதப்படுத்தி வைத்துள்ளனர்.

வில்ட்ஷயர் பகுதியில் உள்ள பிரபல ஸ்டோன்ஹென்ஜ் அகழ்வாய்வு பகுதியில் இந்த மலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒட்டுண்ணிகள் முட்டையிட்டுள்ளன. இதனை ஆய்வு செய்த உயிரியல் விஞ்ஞானிகள் பழங்குடி மக்கள் விலங்குகளின் அழுகிய உடல் உறுப்புகளை உணவாக உட்கொண்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.