கஞ்சா போதையில் மருந்துக் கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் கொள்ளை.. 2 ரவுடிகள் கைது.!

தஞ்சாவூர் பகுதியில் கஞ்சா போதையில், மருந்துக் கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி, கல்லாவில் இருந்து பணத்தை கொள்ளையடித்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்ட ஹரிஹரன், தினேஷ் என்ற ரவுடிகள், தட்டிக் கேட்ட பொதுமக்கள் இருவரை வெட்டிவிட்டு தப்பினர்.

ரவுடிகளை கைது செய்யக் கோரி கடைகளை அடைத்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், கோடியம்மன் கோவில் அருகே சுற்றித் திரிந்த ரவுடிகளை பிடிக்க போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது பாலத்தில் இருந்து கிழே குதித்து ரவுடி ஹரிஹரன் தப்ப முயன்றான். இதில், அவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் மாவுக் கட்டுப் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.