#தமிழகம் || நான் காதலித்தேன், அவன் என்னை கடத்தி சென்றுவிட்டான்., பள்ளி சிறுமியை வீடு புகுந்து கடத்திச்சென்ற நாடக காதலன் அராஜகம்.!

மதுரை மாவட்டம், பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி நேற்று முன்தினம் திடீரென மாயமாகவே, சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், புகாரின் அடிப்படையில் வசஹ்க்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தேடுதலில் இறங்கினர். போலீசாரின் தீவிர நடவடிக்கையால் அந்த சிறுமி மறுநாள் காலை மீட்கப்பட்டார். 

தொடர்ந்து சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “நான் என்.எஸ்.கே.வீதியில் வசிக்கும் அரியன் மகன் கார்த்திக் பாண்டியன் (வயது 22) என்பவரை காதலித்து வந்தேன். 

நேற்றுமாலை என் வீட்டுக்கு வந்த கார்த்திக் பாண்டியன், என்னை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றார்” என்று அந்த சிறுமி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து தனிப்படை போலீசார் கார்த்திக் பாண்டியனை கைது செய்து மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.