பாக்டீரியா தொற்றால் மேலும் ஒரு பெண் பலி| Dinamalar

திருவனந்தபுரம் : கேரளாவில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனும் பாக்டீரியா தொற்றால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் வசித்த சுபிதா, 38, என்ற பெண் உடல் நலக்குறைவால் 10ம் தேதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. சிகிச்சையில் இருந்த சுபிதா நேற்று காலை உயிரிழந்தார்.இதே பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, ஏற்கனவே கேரளாவில் அஸ்வதி, 15, என்ற சிறுமி சமீபத்தில் உயிரிழந்தார்.பூச்சி, எலி, முயல் மற்றும் அணில் ஆகியவை வாயிலாக ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற பாக்டீரியா தொற்று பரவுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.