மேகதாது அணை – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்கக்கூடாது என்றும், இது குறித்து ஜல்சக்தி அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காவிரியின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.