வீட்டில் இருந்த தம்பதியை கட்டி போட்டு ரூ.65 லட்சம் நகை, பணம் கொள்ளை.. முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் கைவரிசை!

திருப்பூரில் வீட்டில் இருந்த தம்பதியை கட்டி போட்டு 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளை அடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சங்கமேஸ்வரன்- ராஜலட்சுமி தம்பதியின் வீட்டுக்குள் முகமூடி அணிந்த 4 பேர் வீட்டுக்குள் நுழைந்து ராஜலட்சுமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகையை கேட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, அவர்களது மகளை ஒரு அறையில் அடைத்த அந்த கொள்ளை கும்பல் தம்பதியை நாற்காலியில் கட்டி வைத்து விட்டு, 50 லட்சம் ரூபாய், 40 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது.

குடும்பத்தினர் மழுப்பலாக பதில் கூறி வருவதால், முழுமையான விசாரணைக்கு பின், உண்மை தெரிய வரும் என தனிப்படை போலீசார் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.