ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்து 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், பரண் மீது இருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் பச்சிளம் பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பிச்சானந்தல் கிராமத்தை சேர்ந்த பரணி என்ற பெண்மணி, தனது 3 மாத பெண் குழந்தை சுபஸ்ரீ-யை ஹாலில் படுக்க வைத்துள்ளார். ஸ்லாப்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் ஒன்று சுபஸ்ரீ-யின் தலை மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

பரணியின் கூச்சல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சுபஸ்ரீயை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.