செங்கல்பட்டு || வேலை இல்லாத விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!

வேலை இல்லாத விரக்த்தியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஏகாட்டூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்  ஜெனிபர்.  இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த மே மாதம் முதல் அவர் வேலையை விட்டதாக தெரிகிறது.

இதனால், அவர் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவதன்று அவர் 24-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.