பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக், சாஜித் ஜாவித் ராஜினாமா: போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

latest tamil news

இதுகுறித்து ரிஷி சுனக் கூறியிருப்பதாவது: அரசு திறமையுடன் சரியாக செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், நான் பதவி விலகுகிறேன். நான் பதவி விலகுவதே இங்கு கடைசியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் மீதிருந்த நம்பிக்கையை இழந்து விட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் அறிவித்துள்ளார். இவர்கள் இருவரின் ராஜினாமா, பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.