சென்னையில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிறது- மெட்ரிகுலேஷன் இயக்குநரகம்

சென்னை:
சென்னையில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி சூறையாடியதை கண்டித்து பள்ளிகள் இயங்காது என சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்து இருந்தார். இந்நிலையில், விடுமுறை அளித்தால் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளிகள் இயங்குகின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.

சென்னை:
பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிறது

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் மாவட்ட தலைவர் ஏலகிரி செல்வம் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் 70% தனியார் பள்ளிகள் இயங்காது என்று மாணவர்களுக்கு தொலைபேசி மூலமாக பள்ளி நிர்வாகங்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.