சாலையில் சென்றுகொண்டிருந்தபோதே தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சாலையில் சென்று கொண்டிருந்தபோதே ஒகினவா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது.

ஓசூர் விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில் அவரது நண்பர் சதாசிவம், தனது குழந்தையை பஸ்தி பகுதியில் உள்ள பள்ளியில் விடுவதற்காக இன்று காலையில் அழைத்துச்சென்று கொண்டிருந்தார்.

தோட்டகிரி சந்திப்பு அருகே சென்ற போது வாகனத்தின் பின்புறத்தில் இருந்து புகை வருவதாக வாகன ஓட்டிகள் சிலர் சதாசிவத்திடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக சதாசிவம் தனது மகளுடன் கீழே இறங்கியதும் சற்று நேரத்திலேயே வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

ஓசூரில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஒகினவா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.