இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் கொரோனா..!- ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது. கொரோனா கடும் வேகமாக பரவி சில தினங்களுக்கு முன்பாக குறைந்தது. தற்பொழுது கொரோனா மேலும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,754 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,14618 ஆக உயர்ந்தது. புதிதாக 47 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,253 ஆக உயர்ந்தது. குணமடைந்தோர் எண்ணிக்கை 4,36,85,535 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,01,830 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 2,09,27,32,604 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 31,52,882 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா எண்ணிக்கை மீண்டும் உயர்வது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.