கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: மதுராவில் குவிந்த பக்தர்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உத்தர பிரதேசம்: கிருஷ்ணர் ஜென்மபூமி கோவில் அமைந்துள்ள உத்தர பிரதேசம் மதுராவில், ஜென்மாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

latest tamil news

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, உத்தர பிரதேசம் மதுராவில் ஜென்மாஷ்டமி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கிருஷ்ணர் ஜென்மபூமி கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. நேற்று இரவு முதல் நடைபெற்று வரும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.

latest tamil news

சென்னையில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.