மின்னல் தாக்கி பலியான மாணவர்.. ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சோகம்..!

மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவிலில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பல மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அந்த பள்ளியில் தாழையடி பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் கஜினி படித்து வருகிறார். சம்பவதன்று, அவர் பள்ளி முன் விளையாடி கொண்டிருந்த போதுபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியது.

படுகாயமடைந்த அவரை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபாரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.