3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான, 30 MQ-9B டிரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான எல்லை மற்றும் இந்திய பெருங்கடல் ஆகியவற்றை கண்காணிக்க ஆயுதங்களுடன் செயல்படக்கூடிய உயர் ரக டிரோன்களை வாங்கும் இந்தியா, அவற்றை கடல் கண்காணிப்பு, தரை நிலைகளை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த உள்ளது.