திருமணமான 2 ஆண்டுக்குள் மனைவியை பிரிகிறாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்? தம்பதி மெளனம் கலைப்பு


இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சஹலும், அவர் மனைவி தனஸ்ரீயும் பிரிவதாக செய்திகள் பரவிய நிலையில் அதற்கு தம்பதிகள் விளக்கமளித்துள்ளனர்.

கடந்த 2020 டிசம்பரில் இருவருக்கும் திருமணம் நடந்தது. தம்பதி அவ்வப்போது தங்களது வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.
ஆனால் சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ உள்ளனர்ன போன்ற வதந்திகள் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டன.

தனாஸ்ரீ தன் சமூக வளைதலப்பக்கத்தில் சஹால் என்ற கடைசி பெயரை நீக்கிய போன்ற சம்பவங்களால் இந்த தகவல் மிகவும் பேசப்பட்டது.
தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்து பதிவிட்டுள்ளார்.

திருமணமான 2 ஆண்டுக்குள் மனைவியை பிரிகிறாரா இந்திய கிரிக்கெட் அணி வீரர்? தம்பதி மெளனம் கலைப்பு | Dhanasree And Chahal Clears Rumours

Dhanashree Verma/Instagram

அந்த பதிவில், எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவரையும் பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இதே போன்ற பதிவை தனஸ்ரீயும் வெளியிட்டுள்ளார்.
திருமணத்திற்கு முன்பே தனாஸ்ரீ ஒரு நடன இயக்குனர் மற்றும் யூடியூபர் என்பது குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.