ஒரே மாதத்தில் 3 மான்கள் பலி : மேட்டுப்பாளையம் சாலையில் தொடரும் சோகம்

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை அகஸ்தியர் ஞான பீடம் செல்லும் வழியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உணவு தேடி வந்த புள்ளிமான் ஒன்று தெரு நாய்களிடம் சிக்கிக்கொண்டது. மானை பார்த்த நாய்கள் அதனை தாக்கிய நிலையில், புள்ளிமான் உயிரிழந்தது.

இந்த சம்பவம் தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி துணை வட்டாட்சியர் பாலமுருகன் வருவாய் ஆய்வாளர் சசிகுமார் ஆகியோர் உடனடியாக மேட்டுப்பாளையம் வனத்துறை  தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் வனத்துறை அரசு மரக்கிடங்குக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொடர்ந்து 3 மான்கள் இறந்துள்ளது அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.