காரவள்ளியில் கொடூரம்! சொத்துக்காக தந்தையை கொலை செய்த மகன்…!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு செங்காட்டுபட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (45) விவசாயி. இவரது மகன் ராஜ்குமார். கடந்த சில வருடங்களுக்கு முன் முதல் மனைவி இறந்து விடவே செல்வராஜ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி பேபிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலம் பிறந்த மகனான ராஜ்குமாருக்கும் தந்தை செல்வராஜ்க்கும் இடையே சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு செல்வராஜ் தனது இரண்டாவது மனைவி பேபியுடன் சேந்தமங்கலத்தில் இருந்து பொலிரோ பிக்கப் வாகனத்தில் கொல்லிமலை நோக்கி சென்றுள்ளார். காரவள்ளி அருகே சென்ற போது அவரது மகன் ராஜ்குமார் அடியாட்கள் 3 பேருடன் வந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து மறித்துள்ளனர்.

மேலும் வாகனத்தில் இருந்த செல்வராஜ் யை கல்லை கொண்டு கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் இருந்த செல்வராஜை மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தையை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அவரது மகன் மற்றும் உடந்தையாக இருந்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்துக்காக தந்தையை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.