ஒகினாவா:ஜப்பானில் ‘ஹின்னம்னார்’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி மணிக்கு, 257 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், கன மழை, புயலுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கிழக்கு சீன கடலில் உருவாகியுள்ள இந்த சூறாவளி, ஜப்பான் தீவுகளை கடுமையாக தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவாக இருக்கும். கடலில் 50 அடிக்கும் அதிகமான அளவு உயரத்துக்கு ராட்சத அலைகள் உருவாகும்.ஜப்பானின் ஒகினாவாவிலிருந்து கிழக்கே 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருக்கும் இந்த சூறாவளி, ருயுக்யா தீவுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஜப்பான் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஒகினாவா:ஜப்பானில் ‘ஹின்னம்னார்’ என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி மணிக்கு, 257 கி.மீ., வேகத்தில் வீசும் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்