சிவகங்கையில் குடிநீர் வருவதை அறிய அலாரம் உருவாக்கிய தொழிலாளி
சிவகங்கையில் நகராட்சி குடிநீர் குழாயில் வருவதை அறிந்து கொள்ளும் வகையில் தொழிலாளி ஒருவர் அலாரம் கண்டுபிடித்துள்ளார். சிவகங்கையில் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் வரும் நேரத்தை அறிந்து குடங்களில் பிடிக்கின்றனர். சிபி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இளங்கோவன். இவரது மனைவி சுமதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காத்திருந்து தண்ணீர் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரும் வீணாகியது. இதை சரிசெய்ய யோசித்த இளங்கோவன், நகராட்சி குடிநீர் வந்ததும் அலாரம் ஓலிக்கும் … Read more