ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு பாதுகாப்பா? காங். விமர்சனம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஒன்றிய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்குவது வேடிக்கையாக உள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு, நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கும் ஆயுதம் ஏந்திய சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், ‘ஆர்எஸ்எஸ் போன்ற தனியார் சொத்துக்களை ஒன்றிய அரசின் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாக்கின்றனர். ஆனால், விமான நிலையத்தில், 3,000 சிஐஎஸ்எப் வீரர்கள் நீக்கப்பட்டு, தனியார் செக்யூரிட்டிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். பொதுச் சொத்துக்கு தனியார், தனியார் சொத்துக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு, என்ன ஒரு வினோதம்’ என கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.