லண்டன் சென்றார் ஜனாதிபதி திரவுபதி முர்மு| Dinamalar

லண்டன்: மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டன் சென்றடைந்தார். அப்பொழுது, கேட்விக் விமான நிலையத்தில் இந்திய தூதர்கள் சிறப்பு வரவேற்பு மேற்கொண்டர்.

பிரிட்டன் ராணி எலிசபெத்:


பிரிட்டனின் இரண்டாம் ராணி எலிசபெத் கடந்த 9 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் இருந்து லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அஞ்சலிக்காகக் கொண்டுவரப்பட்டது. அங்கு லண்டனில் பிரிட்டன் பார்லிமெண்ட் அடங்கிய வெஸ்ட்மின்ஸ்டா் வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக 4 நாள்கள் அரசியின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியின் இறுதிச் சடங்கு நாளை(செப். 19) நடைபெறுவதால் அதில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் லண்டன் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பிரிட்டன் அரசியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவும், இந்திய அரசின் சார்பில், நேற்று(செப்.,17) இரவு விமானம் மூலம் லண்டன் புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று(செப்.,18) அதிகாலை லண்டன் சென்றடைந்தார். அதன் பின், லண்டன் கேட்விக் விமான நிலையம் வந்தடைந்த திரவுபதி முர்முவை இந்திய தூதர்கள் வரவேற்றனர்.

இறுதிச் சடங்கு:


வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெறவுள்ள பிரிட்டன் அரசியின் இறுதிச் சடங்கில், இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று இறுதி மரியாதை செலுத்த உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.