அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஆவது ரி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் ரி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி ரி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று (25) நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பாட்டத்த்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து 187 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள்  பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ரி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.