கான்பூரில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் பலி| Dinamalar

கான்பூர்: உ.பி.யில் இன்று இரவு நடந்த சாலை விபத்தில் டிராக்டரில் சென்ற 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உ.பி. மாநிலம் கான்பூரை சேர்ந்த கிராமவாசிகள் 24 பேர் டிராக்டர் ஒன்றில் உனோவ் மாவட்டத்தில் உள்ள கோயில் விழாவில் பங்கேற்றுவிட்டு கான்பூர் திரும்பி கொண்டிருந்தனர். கதாம்பூர் அருகே டிராக்டர் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது அதில் பயணித்த 24 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலியானவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் , காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத்தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.