புனேயில் பழமையான பாலம் வெடி வைத்து தகர்ப்பு| Dinamalar

புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் சாந்தினி செளக் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே புனே நகரில் சாந்தினி செளக் சந்திப்பில் மிகவும் பழமையான பாலம் உள்ளது பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க இப்பாலத்தை இடித்துவிட்டு புதிய பல் அடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பழமையான பாலம் சுமார் 600 கிலோ வெடி பொருள் வைத்து தகர்க்கப்பட்டது.

முன்னதாக மாவட்ட நிர்வாகம் பாலத்தினை பார்வையிட்டது. பின் நேற்று இரவு 10 மணியளவில் இப்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கையுடன் பாலம் இடித்து தகர்க்கப்பட்டது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.