மீண்டும் ஆரம்பமானது இபிஎஸ் – ஓபிஎஸ் போர்..!! இந்த முறை தேவர் சிலைக்கு..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014-ல் பசும்பொன் தேவர் சிலைக்கு ரூ.3.17 கோடி மதிப்பில் 13 கிலோ எடை உள்ள தங்க கவசம் தந்தார். தங்க கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு ஆண்டுதோறும் குருபூஜையின் போது அதிமுக சார்பில் தேவர் தங்க கவசம் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து பூஜை முடிந்த பின் வங்கியில் ஒப்படைப்பது வழக்கம்.

இதை அடுத்து இந்த ஆண்டுக்கான முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை விழா அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளதால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கடந்த வாரம் தேவர் தங்க கவசத்தை பெற உரிமை கோரி கடிதம் மற்றும் அதற்கான ஆவணங்களை வங்கியில் சமர்பித்தார். மேலும், தேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோருவதற்கான நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் வழங்கிய தங்க கவசத்துக்கு உரிமை கோரி வங்கியில் வங்கியில் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.