Twitter நிறுவனத்தை வாங்கிய Elon Musk! இந்திய வம்சாவளி பராக் அகர்வால் வேலையை விட்டு நீக்கி அதிரடி!

டெஸ்லா நிறுவன தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரராக உள்ள எலன் மஸ்க் அடுத்த அதிரடியாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அவர் அந்த நிறுவனத்தை வாங்கியதும் முதல் வேலையாக அந்நிறுவனத்தின் CEO பராக் அகர்வால் அவர்களை பணிநீக்கம் செய்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் ட்விட்டர் நிறுவனத்தை தான் விரும்பிய வகையில் வழிநடத்தி செல்லவும் எலன் மஸ்க் இதை செய்துள்ளார்.

ஏற்கனவே ட்விட்டர் தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர் கையில் சிங்க் ஒன்றுடன் வந்தது அனைவரையு நகைச்சுவைக்குள்ளாக்கியது. அவரை தவிர இன்னும் மூன்று தலைமை பதவிகளில் வேலை செய்யும் நபர்களையும் அவர் வேலையே விட்டு நீக்கியுள்ளார்.

Whatsapp செயலியில் புதிய Call Link வசதி அறிமுகம்! இனி அதிகம் நபர்களுடன் பேசலாம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த பராக் அகர்வால் மற்றும் விஜய கட்டே ஆகிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை நீக்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனடை 44 பில்லியன் டாலர் செலுத்தி அவர் வாங்கியுள்ளார். பிரபல ‘The New York Times’ பத்திரிகை எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு சுத்தம் செய்ய தொடங்கிவிட்டார் என்று தெரிவித்துள்ளது.

இந்த இருவரில் ஒருவரை ஆட்கள் வந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது அது யார் என்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த எலன் மஸ்க் “ ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதற்கு முக்கிய காரணமே உலகில் உள்ள அனைவர்க்கும் ஒரே டிஜிட்டல் இடமாக இது இருக்கவேண்டும் என்பதே.

5G Network மூலம் இந்தியாவில் கல்வி அடுத்த லெவல் செல்லும்! பிரதமர் நரேந்திர மோடி

இது தற்போது வலதுசாரியாகவும் இடதுசாரியாகவும் மாற அதிக வாய்ப்புள்ளது. இதனை மீண்டும் நடுநிலை படுத்தவே இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதாகவும் தொடர்ந்து வலது மற்றும் இடதுசாரிகள் இதனை வைத்து மக்கள் மற்றும் சமூகத்தை பிரிக்க நினைப்பதாக” தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதால் “இனி பறவை சிறையில் இருந்து விடுபட்டுவிட்டதாக” தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.