நவம்பர் 9 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு… அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் அக்., 29 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை பொழிய தொடங்கியது. ஏற்கனவே சென்னை வானிலை மையம் தெரிவித்ததன்படி, அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

சென்னையில், சில இடங்களில் அதிகபட்ச
மழை
பதிவானது. இந்த நிலையில் வரும் 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ” இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நவம்பர் 9 ஆம் தேதி உருவாகி வாய்ப்புள்ளது.

அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வால் தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.