பிரிவினைவாத தலைவர் சொத்து முடக்கம்| Dinamalar

புதுடில்லி, பயங்கரவாத செயல்களுக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டிய ஜம்மு – காஷ்மீர் பிரிவினைவாத தலைவரின் வீட்டை அமலாக்கத் துறை கையகப்படுத்தியது.

ஜம்மு – காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர் சபீர் அஹமது ஷா, பயங்கரவாத செயல்களை செய்வதற்காக, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக நிதி திரட்டினார்.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு சபீர் மீது 2017ல் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதே குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ஸ்ரீநகர் சனத் நகரில் உள்ள சபீர் வீட்டை அமலாக்கத் துறை கையகப்படுத்தியது. இதன் மதிப்பு, 21.80 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.