சுட்ட இடத்துக்கு வரும் இம்ரான் கான்; பாகிஸ்தான் அரசு பரபரப்பு உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த 3ம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்று இருந்தார்.

அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார். நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியதால் இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்டதாக, கைதான நபர் போலீசாரிடம் வாக்குமூலம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான சவுக்கத் கானும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ரேஷன் கார்டுதாரர்கள் ஹேப்பி; பொங்கலுக்கு சூப்பர் அறிவிப்பு!

அங்கு இம்ரான் கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமுடன் உள்ளதாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பைசல் சுல்தான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் இம்ரான் கான் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர் பைசல் சுல்தான் கூறியுள்ளார். இந்நிலையில் இம்ரான்கான் மருத்துவமனையில் இருந்தபடியே பேசியதாவது:

நான் சுடப்பட்ட அதே இடத்தில் இருந்து செவ்வாய்கிழமை மீண்டும் பேரணி தொடரும். நான், லாகூரில் இருந்து கொண்டே பேரணியில் உரையாற்றுவேன். எங்கள் பேரணி ராவல் பிண்டியை அடைந்தவுடன் நான் நேரில் கலந்து கொண்டு பேரணியை மீண்டும் தலைமையேற்று வழிநடத்துவேன்.

கூட்டுறவு அமைச்சர் உதயநிதி?; தெறிக்கவிடும் முதல் அறிவிப்பு!

எங்களுடைய பேரணி அடுத்த 10 முதல் 14 நாட்களுக்குள் ராவல் பிண்டியை வந்து அடையும். இவ்வாறு இம்ரான் கான் கூறினார். முன்னதாக இம்ரான் கான் குறித்து செய்தியை ஊடகங்களில் ஒளிபரப்பக் கூடாது என, அனைத்து ஊடகங்களுக்கும் பாகிஸ்தான் அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது. இந்நிலையில் இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் சமூக வலைதளத்தில் இருந்து இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.