சீனாவில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
சீனாவுக்கு வரும் பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலம் 7 நாட்களில் இருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்ட மறு நாளே, அந்நாட்டில் புதிதாக 11 ஆயிரத்து 950 பேருக்கு உறுதியாகியுள்ளது.
இதனால் சுமார் 19 மில்லியன் மக்கள் வசிக்கும் குவாங்ஷூ மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குவாங்ஷூவில் இருந்து பெய்ஜிங் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில பகுதிகளில் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.