சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், எந்தவொரு வாக்குச்சாடியிலும் மறுவாக்குப்பதிவு பரிந்துரைக்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 23ந்தேதி மிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் உள்ள 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப்பதிவின்போது, சில வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக சில சர்ச்சைகள் எழுந்தன. இதனால், அந்த பகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறுமா என கேள்வி எழுந்தது. […]