61 கிலோ தங்கம் பறிமுதல்

தான்சானியாவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வந்த 4 பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்ததில், அவர்கள் பிரத்யேகமான பெல்ட் மூலம் தங்கம் கடத்தியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ₹32 கோடி மதிப்பிலான 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், தோகாவில் இணைப்பு விமானத்தில் ஏற வந்த போது, சூடானை சேர்ந்த ஒருவர் பெல்ட்டை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து 7 பேரை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மும்பை விமான நிலையத்தில் ஒரே நாளில் இந்த அளவு தங்கம் பறிமுதல் செய்ப்பட்டது இதுவே முதல் முறை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.