#BREAKING: மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம்: முதல்வர் உத்தரவு..!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆறு மணி நேரத்தில் 44 செண்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. இந்த வரலாறு காணாத பழகினால் திரும்பிய திசை எல்லாம் வெள்ளைக்காடாக காட்சி அளிக்கிறது.தொடர் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.