குடியரசுத் தலைவரின் தோற்றம் குறித்து அவதூறுப் பேச்சு.. மேற்குவங்க அமைச்சரின் பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் மம்தா பானர்ஜி!

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவின் தோற்றம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேற்குவங்க அமைச்சர் அவதூறாக பேசியதற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத்தலைவர் குறித்ததான அமைச்சர் அகில் கிரியின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

அவர் பேசியது தவறு என்றும், அத்தகைய கருத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்த மம்தா பானர்ஜி, அதற்காக மன்னிப்பு கோரினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.