காதலியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கு; குற்றவாளிக்கு உண்மை கண்டறியும் சோதனை.!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டேட்டிங் செயலியான பம்பில் சந்தித்த அஃப்தாப் பூனாவாலா – ஷ்ரத்தா வால்கர் ஜோடி, மும்பைக்கு அருகிலுள்ள தங்கள் சொந்த ஊரான வசாயில் ஒன்றாக வாழ்ந்தனர். பிறகு இந்த ஆண்டு மே மாதம் டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். கடந்த மே 18 அன்று, மெஹ்ராலியில் உள்ள அவர்களது வாடகை குடியிருப்பில் குடியேறிய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜோடிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு, அஃப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்துக் கொன்றார். அவர் உடலை வெட்டி, பல துண்டுகளாக குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்த 18 நாட்களில் காட்டில் வீசியுள்ளார்.

சம்பவம் கடந்த மே மாதம் நடந்தாலும், கடந்த ஆண்டு முதல் தனது மகளுடன் தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் ஷ்ரத்தா வாக்கரின் தந்தை விகாஸ் வால்கருக்கு இது குறித்து தெரியவில்லை. ஆனால் ஷ்ரத்தா அவரது நண்பர்களுடனும் தொடர்பில் இல்லாமல் இருந்ததால், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு போலீஸிடம் சென்றுள்ளார். அதற்கு பின்னர் தான் மகள் கொலையானது குறித்து தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட அஃப்தாப் பூனாவாலாவை, போலீஸார் விசாரித்து வருகின்றனர், இன்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், உள்ளூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர் செய்யப்பட்டார். அப்போது, அஃப்தாப் பூனாவாலா மீது உண்மை கண்டறியும், போதைப்பொருள் பகுப்பாய்வு சோதனைக்கு உள்ளூர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும் விசாரணையில் அவரது போலீஸ் காவலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் கூறும்போது, ‘‘குற்றச் செயல்களுக்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சந்தேகத்திற்குரிய நபரின் உடலில் ஒரு குறிப்பிட்ட இரசாயனத்தை உட்செலுத்தி, அவர்கள் உண்மையைப் பேசுவதற்காக அவர்களின் சுயநினைவைக் குறைக்கும் வகையில், போதைப்பொருள் பகுப்பாய்வு சோதனை நடத்தப்பட உள்ளது. ஷ்ரத்தா வால்கரின் மொபைல் போன் மற்றும் அவரது உடலை வெட்ட அவர் பயன்படுத்திய கத்தி போன்ற முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.

ஆனால் சடலத்தை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி அல்லது ரம்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது உடலின் பெரும்பாலான பாகங்கள் காணவில்லை. கொலை நடந்த அன்று தம்பதியினர் அணிந்திருந்த ஆடைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஷ்ரத்தாவின் மொபைல் போன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கொலை நடந்த ஒரு நாள் கழித்து அவர் கத்தி மற்றும் குளிர்சாதனப்பெட்டியை வாங்கினார் என்பதற்கான பில்கள் ஆதாரப் பட்டியலில் உள்ளன. காட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள், சமையலறையில் ரத்தக்கறை, ஷ்ரத்தாவின் கணக்கிலிருந்து ரூ.54,000 அஃப்தாப் பெற்ற வங்கி விவரங்கள், தொலைபேசிகளிலிருந்து அழைப்பு பதிவுகள் மற்றும் இருப்பிடத் தரவு, பிளாட்டில் இருந்து ஷ்ரத்தாவின் பை உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு வருகிறது.

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்புணர்வு.. வீடியோ வெளியிட்ட மூவர் கைது..

மேலும் அஃப்தாப்பை ஹிமாச்சல பிரதேசத்தின் பார்வதி பள்ளத்தாக்குக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு மே மாதம் டெல்லிக்கு செல்வதற்கு முன்பு தம்பதியினர் தங்கியுள்ளனர். காட்டில் கண்டெடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் ஷ்ரத்தாவினுடையதா என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அறிக்கை வர இரண்டு வாரங்கள் ஆகும்’’ என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.