தொலைபேசிக்கு வரும் புதிய நபர்களின் அழைப்புகளை பெயருடன் காண்பிக்கும் முறையை டிராய் அமைப்பு அமல்படுத்த உள்ளதாக தகவல்..!

தொலைபேசிக்கு வரும் புதிய நபர்களின் அழைப்புகளை பெயருடன் காண்பிக்கும் முறையை 3 வாரங்களில் டிராய் அமைப்பு நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தொலைபேசியில் பதிவு செய்யப்படாத நபர்கள் அழைக்கும்பொழுது, ட்ரூகாலர் செயலி மூலம் அவர்களின் பெயர் கண்டறியப்படும் நிலையில், அந்த செயலிக்கு மாற்றாக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கே.ஒய்.சி. எனப்படும் வாடிக்கையாளர்கள் அளித்த தனிப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அந்த புதிய நடைமுறை செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.