நளினி உட்பட 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் நவம்பர் 11ம் தேதி உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நளினி, பேரறிவாளன், முருகன் , சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் , ரவிச்சந்திரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அதில் பேரறிவாளன் கடந்த மே மாதம் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதே போல் தங்களையும் விடுவிக்கக் கோரி இதர ஆறுபேரும் மனுதாக்கல் செய்தனர். இதனை ஏற்று நவம்பர் 11ம் தேதி உச்சநீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.