ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம குட் நியூஸ் – தமிழக அரசு சூப்பர் திட்டம்!

“சத்தான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

ரேஷன் கடைகளில், 2 மற்றும் 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை துவக்க விழா, கோவை சிந்தாமணியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நடப்பு ஆண்டு விவசாயிகளுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை, 9.51 லட்சம் பேருக்கு, 7,166 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டு, 1.56 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, 1.28 லட்சம் பேருக்கு, 848 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. தவிர, 1.76 லட்சம் விவசாயிகளுக்கு, 801 கோடி ரூபாய் கால்நடை கடன் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், 1.17 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 2,755 கோடி ரூபாய் கடன் தள்ளுபடிக்கான பணிகள் நடந்து வருகின்றன. நடப்பு ஆண்டு, புதிதாக, 14 ஆயிரத்து, 451 குழுக்களுக்கு, 471 கோடி ரூபாய் கடன்

வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவுத் துறையில், 66 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வைப்பு நிதி வைக்கப்பட்டு உள்ளது.

உணவுத் துறையில், 8.47 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1.21 லட்சம் விவசாயிகளுக்கு, 1,616 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. நகைக் கடனை பொறுத்தவரை, தகுதி உள்ள அனைவருக்கும் தள்ளுபடி கிடைக்க வேண்டும் என, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அடுத்த கட்டமாக சத்தான உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ‘டியூகாஸ்’ உர உற்பத்தி நிறுவனம் மீண்டும் செயல்படுவதற்கான அனுமதி பெற அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.