கால்பாந்து வீராங்கனை பிரியா மரணம்..அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் முக்கிய ஆலோசனை.!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார்- உஷாராணி தம்பதி மகள் 17 வயதான பிரியா, சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி. உடற்கல்வியியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதால், கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்தவமனையில் கடந்த 7ம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், கால் வலி, வீக்கம் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால், அவரது வலது கால் அகற்றப்பட்டது.

பெரியார் நகர் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்ததால், விசாரணை நடத்த சுகாதாரத் துறை குழு அமைத்தது. இதற்கிடையில், பிரியா கடந்த 15ம் தேதி உயிரிழந்தார். இந்த மரணம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பிரியாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன், வருகிற 23ம் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் சுப்புபிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு, மறு குடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மாணவி பிரியா மரணத்தில் தொடர்புடைய இரண்டு மருத்துவர்களை கைது செய்தால், டாக்டர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். எவ்வாறு மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர்கள் கருதுகிறார்களோ, அந்த அளவிற்கு அந்த குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுகட்ட முடியாதது. போராட்டம் குறித்து மருத்துவர்களிடம் நாங்கள் பேசிக் கொண்டு இருக்கிறோம்,

இனிமேல் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் பணியாற்றி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன், வரும் 23ம் தேதி மிக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளபட உள்ளது. மேலும், கால் பந்து வீராங்கனை பிரியாவும் மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை. ஆபரேஷனுக்கு பிறகு காலில் கட்டு போடட்டால், அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். இது கொலை குற்றமா என்பது எல்லாம் சட்டம் தான் முடிவு செய்யும்’’ இவ்வாறு கூறினார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.