அரசியல் சாசனத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராடுவேன்! ராகுல்காந்தி – வீடியோ

டெல்லி:  அரசியல் சாசன தினத்தையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டிவிட்டரில் அரசியல் சாசனம் தொடர்பான வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26ம் தேதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக நாடு முழுவதும் கொண்டாடி வருகிறோம். அதன்படி இன்று நாடு முழுவதும் இந்திய அரசியலைமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி  தனது டிவிட்டர் சமுக வலைதளத்தில் அரசியல் சாசனம் தொடர்பான வீடியோ வெளியிட்டு டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,   அண்ணல் அம்பேத்கர் நம் அனைவரையும் ஒற்றுமை பாதையில் அணிவகுக்க சொன்னார். அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் நிலைநிறுத்தப்படும் வரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.