சி.ஆர்.பி.எப்., வீரர் சுட்டதில் சகவீரர்கள் 2 பேர் பரிதாப பலி| Dinamalar

போர்பந்தர் : குஜராத்தில், தேர்தல் பணிக்காக வந்து தங்கி இருந்த சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்களில் ஒருவர், திடீரென சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர்.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் ௧ மற்றும் ௫ தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், போர்பந்தர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள், துக்தா கோசா கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீரர்களில் ஒருவர், திடீரென நேற்று முன்தினம் இரவு சகவீரர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; இருவர் பலத்த காயமடைந்தனர். இவர்கள், உடனடியாக ஜாம்நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.