ராமநாதபுரம் : தண்ணீர் கேன்களில் இருந்தது என்ன? – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அருகே வேதாளை கடற்கரை சாலையில் நேற்று இரவு கடலோர போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது அந்த காரில் சுமார் 25 லிட்டர் தண்ணீர் கேன்கள் முப்பது இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, “காரில் இருந்த ஜெயினுதின் மற்றும் சார்பாஸ்நவாஸ் உள்ளிட்ட இருவரும் தண்ணீர் கேன்களில் கொக்கேன் போதைப்பொருளை அடைத்து வைத்து இலங்கைக்கு கடத்துவதற்கு முயன்றுள்ளனர். 

தண்ணீர் கேன்களில் இருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என்பது தெரியவந்துள்ளது” என்று போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.