டெல்லி க்ரீன் சிக்னல்..! எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக; வெளியேறும் ஓபிஎஸ்

ஜி – 20 மாநாடு கூட்டத்திற்கு, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய பாஜக அரசு கடிதம் அனுப்பி இருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டு உள்ளது. கட்சியின் அதிகாரமிக்க பதவியான பொதுச் செயலாளர் பதவியை பிடிப்பதில்,

– எதிர்க்கட்சித் தலைவர்

இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை, எடப்பாடி பழனிசாமி நடத்தினார். அதில், 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, அதே நாளில் அதே பொதுக்குழு மேடையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தார்.

இதுவரை நீதிமன்றங்களில் நடைபெற்ற விசாரணைகளில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே சாதகமான உத்தரவுகள் வந்துள்ளன. இது ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டாலும், மனம் தளராத ஓ.பன்னீர்செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், ஜி – 20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் கூட்டங்கள் குறித்து, டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

அதாவது, அதிமுக தலைமை விவகாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு, மத்திய பாஜக அரசு, ஜி – 20 மாநாடு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ள அதிமுக, உண்மையான அதிமுக என்பதை மத்திய அரசு கருதுவது தெளிவாகத் தெரிகிறது. இதை ஏற்று, எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு விரைந்துள்ளார்.

மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியை, உண்மையான அதிமுக என, மத்திய அரசு கருதவில்லை என்பதும் தெரிகிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை அதிமுக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.