முகத்தை சிதைத்து இளைஞர் படுகொலை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட ஆறு பேர் வெறிச்செயல்


இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக கிடந்த இளைஞர்

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லப்பா. இவர் பெங்களுரூவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மல்லப்பா கே.பி.அக்ரஹாரா பகுதியில் சாலையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மல்லப்பாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிசிடிவி காட்சியில் அதிர்ச்சி

அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்தனர். அதில் மூன்று பெண்கள் உட்பட ஏழு பேர் மல்லப்பாவிடம் தகராறில் ஈடுபடுகின்றனர்.

ஒரு கட்டத்தில் இளைஞரை சரமாரியாக தாக்கும் அந்த கும்பல் அவரை கீழே தள்ளுகிறது.

அப்போது அவர்கள் ஒருவர் அங்கிருந்து விலகி செல்கிறார்.

முகத்தை சிதைத்து இளைஞர் படுகொலை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட ஆறு பேர் வெறிச்செயல் | Man Killed By Group Of Six Members

@Indiatv

பெண்கள் இருவர் தரையில் கிடந்த கல்லை எடுத்து வந்து மல்லப்பாவை தாக்குகின்றனர்.

அவரது முகத்தை கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்கிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

முதற்கட்ட விசாரணையில் பெண் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாகவும், கொலை செய்த நபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.