திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு நடைபெற்றது இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான
, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை. சொல்லப்போனால் இது எதிர்பார்த்த ஒரு முடிவுதான்.
இன்னும் சொல்ல போனால் அவர் விரைவில் துணை முதல்வராக கூட வாய்ப்பு உள்ளது. அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்” என்று சீமான் பதிலளித்தார்.
கூகுள் நியூசில் சமயம் தமிழ் செய்திகளை படிக்க இங்க கிளிக் செய்யுங்க!
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பு ஏற்றபோதே, உதயநிதியின் பெயரும் அமைச்சரவை பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இடம்பெறாதது அவரது ஆதரவாளர்கள் மததியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என அன்பின் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ். சிவசங்கர் உள்ளிட்ட திமுக அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர்.
உதயநிதியை அமைச்சராக்கும் தீர்மானத்தை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறைவேற்றி, இந்த விஷயத்தில் தங்களது விசுவாசத்தை தொடர்ந்து காட்டி வந்தனர் திமுக உடன்பிறப்புகள். ஆனால், வாரிசு அரசியல் விமர்சனங்கள் கடுமையான எழுந்துவிடும் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் இதுநாள்வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில்
அமைச்சராவது தற்போது உறுதியாகி, ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அவர் அமைச்சராக பொறுப்பேற்கவும் உள்ளார்.
நிறைவேறும் துர்கா ஸ்டாலினின் ஆசை:
தமது 68 வயதில் முதல்வராகி உள்ள ஸ்டாலின், கட்சி, ஆட்சி என இரண்டையும தொடர்ந்து தோய்வின்றி கவனிப்பது சற்று சிரமமான விஷயம் என்ற யதார்த்தம்தான், உதயநிதியை விரைவில் அமைச்சராக்க வேண்டும் என்று துர்கா ஸ்டாலின் தொடர்ந்து தூபம் போட்டு வந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வந்தது.
அத்துடன் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கட்சியிலும், ஆட்சியிலும் ஸ்டாலினுக்கு பதவி, பொறுப்புகள் வழங்கப்பட்டபோது குடும்பத்துக்குள்ளும் கட்சிக்குள்ளும் ஏகப்பட்ட நெருக்கடியை கருணாநிதியும், ஸ்டாலினும் சந்தித்தை கண்கூடாக பார்த்திருப்பவர் துர்கா ஸ்டாலின். இதன் காரணமாகவே தன் கணவருக்கு நேர்ந்த கஷ்டம் தமது மகனுக்கும் நேரக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக இருந்து வந்தாராம் துர்கா ஸ்டாலின். தமது மகளை அமைச்சராக்கி பார்க்க வேண்டும் என்ற துர்கா ஸ்டாலினின் ஆசை நாளை நிறைவேற உள்ளது.
‘கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம்; தலைவரின் தொண்டனாகவே திமுகவில் இருப்பேன்’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற கட்சி விழாவில் உதயநிதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.