விருதுநகர் இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.! மிஸ் பண்ணாம கலந்துகொள்ளுங்க.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்கு  விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டிஐ. மற்றும் டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி உடையவர்களை விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தம் செய்வதற்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். 

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் முதலில் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வரவேண்டும். 

இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் நேரில் சென்று விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளவேண்டும். 

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பின் அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.