10ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேஷிய விமானம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது…

கோலாலம்பூர்: 10ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ விமானம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் புதிய தகவ்லகள் வெளியாகி உள்ளன. அந்த விமானம்,  விமானிகளால்,  திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற மலேஷிய விமானம், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 2ந்தேதி நடுக்கடலில் காணாமல் போனது. இந்த விமானத்தில் 22 பேர் இருந்தனர்; அவர்களில்  பலர்,  சீனாவைச் சேர்ந்தவர்கள். மாயமான விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால், இதுவரை பெரிய அளவில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில் ஒரு மீனவர் வீட்டில் இருந்து, விமானத்தின் கதவு ஒன்று சமீபத்தில் மீட்கப்பட்டது. அந்த கதவு, அந்த மீனவர் தன் வீட்டில் துணி துவைப்பதற்கு பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. விசாரணை நடத்தியதில் அந்த கதவு, மாயமான மலேஷிய விமானத்தின் கதவு என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து,  அந்தக் கதவு குறித்து விமான நிபுணர்கள் பரிசோதனை நடத்தினர். மேலும் கிடைத்துள்ள சில இயந்திர பாகங்களையும் கொண்டு நடத்த ஆய்வில், விமானம் பலத்த சேதம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாயமான அந்த  விமானத்தில், இந்த கதவு முக்கிய ஆதாரமாக  இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன்,  இந்த கதவானது,  விமானத்தின் சக்கரம் இருக்கும் பகுதியில் இருக்கும் அவசர கால கதவு என்றும், இந்த கதவுகளை  விமானிகள்  பொதுவாக இயக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளதுடன்,  குறிப்பாக கடல் பகுதியில் அதை இயக்க மாட்டார்கள். அவ்வாறு இயக்கினால், விமானத்துக்கு அதிக சேதமும், மிக விரைவாக மூழ்கும் அபாயமும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாயமான அந்த விமானம், மிக அதிக வேகத்தில் கடலில் வேகமாக மோதியதில், பல துண்டுகளாக உடைந்துள்ளது என்றும்  இதனால், விமானிகள் திட்டமிட்டு கடலில் விமானத்தை அதிவேகமாக கொண்டு சென்று  மோதியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.