ஜம்மு காஷ்மீரின் ராஜோரி பகுதியில் ராணுவ முகாமுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி பகுதியில் ராணுவ முகாமுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த ஷாலிந்தர் குமார், கமல் கிஷோர் ஆகிய இருவர், இன்று காலை 6 மணியளவில் முகாம் நுழைவாயிலுக்கு அருகே வந்தபோது. அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தான் இருவரும் பலியானதாக குற்றஞ்சாட்டிய உறவினர்கள், ராணுவ முகாம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, ரஜோரி – ஜம்மு நெடுஞ்சாலையில் டயர்களை எரித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் ராஜோரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.