நாடாளுமன்றத்தில் கீழே விழுந்த சசி தரூர்!…மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள மாநிலம், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சசி தரூர் நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்தார்.

இதில் அவரது இடது காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. தாங்க முடியாத வலி காரணமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் நேற்று அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.

மருத்துவமனையில் சசி தரூக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. வார இறுதியில் தனது திருவனந்தபுரம் தொகுதிக்கு செல்லவிருந்த பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.